தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்


தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
x

தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தி.மு.க.-ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story