சிதம்பரத்தில் திமுக நிர்வாகி திடீர் சாவு


சிதம்பரத்தில் திமுக நிர்வாகி  திடீர் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:45 PM GMT)

சிதம்பரத்தில் திமுக நிர்வாகி திடீரென உயிாிழந்தாா்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி தலைவராகவும், சிதம்பரம் நகர 15-வது வார்டு செயலாளருமாகவும் இருந்து வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (60). இவர்களுக்கு பாலாஜி, ஶ்ரீதர், ஶ்ரீராம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்க்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி தமிழரசி, சிதம்பரம் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story