வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு - அசாமிலும் நில அதிர்வு

வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு - அசாமிலும் நில அதிர்வு
Published on

டாக்கா,

வங்காளதேச நாட்டில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களும் நில அதிர்வு உணரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com