சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
Published on

சென்னை,

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர் அளித்த புகாரை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜூலை 7-க்குள் பதலளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஆணையை மீறி செயல்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com