முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

முதியவர் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்


கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடியை சேர்ந்தவர் தனபால் (வயது 55). குடி பழக்கத்திற்கு அடிமையான தனபால், சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தனபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story