தமிழ்நாட்டில் மின் நுகர்வு புதிய உச்சம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்


தமிழ்நாட்டில் மின் நுகர்வு புதிய உச்சம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
x

மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு இன்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினி சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story