4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்


4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 10:29 AM GMT)

பொறையாறு அருகே 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

விழுப்புரம் முதல் நாகை வரையிலான 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பொறையாறு அருகே பூந்தாழை கிராமத்தில் வடிகால் வாய்க்காலை மூடி மறைத்து 4 வழிச்சாலை பணியை மேற்கொள்ள முயன்றதை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பொறையாறு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story