விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

பனப்பாக்கம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

காத்திருப்பு போராட்டம்

பனப்பாக்கத்தை அடுத்த கல்பலாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இயற்கை விவசாயி பிரபாகரன், பாலாஜி, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டார்.

உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கிற்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.75 வழங்கிட வேண்டும்.

10 அம்ச கோரிக்கைகள்

தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்கவேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். தொழிற்பேட்டைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story