விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

மொரப்பூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

மொரப்பூர்

பெற்றோர் கண்டிப்பு

மொரப்பூர் அருகே உள்ள சூரப்பட்டியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள் சுஜி. இவருக்கு திருமணமாகி விட்டது. மேலும் இவருக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை பெற்றோர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிற்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story