காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா


காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா
x

காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி போலீஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் மற்றும் சக்தி காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் உற்சவ திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், காரியாபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story