நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Oct 2023 5:39 AM GMT (Updated: 12 Oct 2023 7:01 AM GMT)

நீலகிரி வரையாடு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நீலகிரி,

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூபாய் 25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை 'வரையாடு தினம்' என அனுசரித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் "நீலகிரி வரையாடு திட்டத்தை" காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.


Next Story