கோடியக்கரை சரணாலயத்திற்கு முன்கூட்டியே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்


கோடியக்கரை சரணாலயத்திற்கு முன்கூட்டியே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்
x

கோடியக்கரை சரணாலயத்திற்கு முன்கூட்டியே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகப்பட்டினம்

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு காலநிலை மாற்றத்தால் முன்கூட்டியே வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகிறது.

கோடியக்கரை பறவைகள் சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

காலநிலை மாற்றம்

தற்போது காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்க கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே வந்து குவிந்துள்ளன.

தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் உள்ளிட்ட பறவைகள் வர தொடங்கி உள்ளது. சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக வெளிநாட்டு பறவைகள் அமர்ந்து இரைதேடுவதும், சிறகு அடித்து பறப்பதும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

தீவுகளில் காணலாம்

இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும், படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் எனவும் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.


Next Story