ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
x

நெல்லையில் ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை உடையார்பட்டி செல்வி அம்மன் கோவில் தெருவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் கோகிலவாணி, தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story