அரியலூரில் நாளை குரூப்-4 போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு


அரியலூரில் நாளை குரூப்-4 போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு
x

குரூப்-4 போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு அரியலூரில் நாளை நடக்கிறது.

அரியலூர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டி தேர்விற்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுடைய போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் https://forms.gle/uvhat79jojgtXMkd6 என்ற Google Form-யினை சொடுக்கி தங்களது விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்குள் உள்ளீடு செய்து கொள்ளவும். மேற்படி பதிவு செய்த இளைஞர்கள் மட்டுமே இலவச மாதிரி தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் வருகை புரிந்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story