புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்க நிதி


புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்க நிதி
x

புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்கும் பணிக்கு நிதி வழங்கப்பட்டது.

கரூர்

புகழூர் நகராட்சி சந்தைக்கு கேமராக்கள் அமைக்கும் பணிக்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை நகராட்சி ஆணையாளர் பால்ராஜிடம் வழங்கினார். இதில், நகர்மன்ற துணைத்தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story