3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாகப்பட்டினம்

நாகை அக்கரை குளம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ் (வயது 41), மருந்து கொத்தள ரோடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (27), செம்மரக்கடை சந்தை பகுதியை சேர்ந்த சேத்தப்பா (44) ஆகிய 3 பேர் மீது நாகை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை புழல் சிற சிறையில் உள்ள முனீஸ், திருச்சி மத்திய சிறையில் உள்ள அலெக்ஸ், சேத்தப்பா ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


Next Story