கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:-
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற நபரை சோதனை செய்தனர். அப்போது, அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ராய் (வயது 36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மத்திகிரி அருகே பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்தும், கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





