பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது

பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). இவரது பெட்டிக்கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜ் பெட்டிக்கடையில் 4 லிட்டர் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார் 4 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





