தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் 42,000 கடந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com