அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியம் - தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை


அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியம் - தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
x

பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு(தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

நிரந்தர அங்கீகாரம் பெற்றபள்ளிகள் 4 வகைச் சான்றிதழ்கள் பெற்றிருப்பதை சரிபார்த்த பின்னரே கற்பித்தல் மானியத்தை விடுவிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த இடங்களில்தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்."

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story