நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை


நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும்,  இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை
x

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வியையும், வாய்ப்புகளையும் வழங்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story