தேனியில் நடந்த முகாமில்244 பயனாளிகளுக்கு ரூ.38¼ கோடி கடனுதவி:கலெக்டர் வழங்கினார்


தேனியில் நடந்த முகாமில்244 பயனாளிகளுக்கு ரூ.38¼ கோடி கடனுதவி:கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:45 PM GMT)

தேனியில் நடந்த முகாமில் 244 பயனாளிகளுக்கு ரூ.38¼ கோடியில் கடனுதவியை கலெக்டர் வழங்கினார்.

தேனி

தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் ஆகியவை மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, 244 பயனாளிகளுக்கு ரூ.38 கோடியே 44 லட்சம் மதிப்பில் பல்வேறு கடனுதவிகளுக்கான உத்தரவுகளை வழங்கி பேசினார். முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் வங்கி மேலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story