வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்


வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
x

அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

திருவாரூர்,

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.8,250 கோடியை வாங்கிய பா.ஜ.க., இப்பொழுது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருமான வரி, வட்டி, அபராதம் உள்ளிட்டவற்றை விதிக்கிறது. இது அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அதற்கும் மேலாக மக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

அனைத்து கட்சிகளையும் நாங்கள் ஒழித்து விடுவோம் என்றும், நாங்கள் மட்டும்தான் கட்சி நடத்த முடியும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது உண்மையில் ஒரே நாடு, ஒரே கட்சி ஆகும். அந்த எச்சரிக்கை அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழித்துக்கொள்வார்கள்."

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.




Next Story