சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு


சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 3 Jun 2023 7:00 PM GMT (Updated: 3 Jun 2023 7:00 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து வழக்குகள்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றினார். அப்போது 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்தமங்கலம் கோர்ட்டில் இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன், வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்டம் சவுத் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

பிடிவாரண்டு

இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில் சேந்தமங்கலம் கோர்ட்டில் இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சேந்தமங்கலம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story