அரசியலுக்காக வெளியில் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி


அரசியலுக்காக வெளியில் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
x

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது. முதல்-அமைச்சராக இருப்பவர் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்-அமைச்சர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

அரசியலுக்காக வெளியில் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை. அதற்கான உதாரணமாகத்தான் இதை பார்க்கிறேன். பேச வேண்டிய இடத்தில் தமிழக அரசு எதுவும் பேசாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிக சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை. அனைத்து பகுதிகளிலும் கஞ்சாவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அளவில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story