மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு


மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணம் திருட்டு
x

மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கேசவபுரம் சேது நகரில் வசிப்பவர் சம்பத்குமார் (வயது 61). இவரது மனைவி தேவி. இவர்களது 2 மகன்கள் திருவொற்றியூரில் வசித்து வரும் நிலையில், அவர்களை பார்ப்பதற்காக கடந்த 10-ந் தேதி சம்பத்குமார் வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 10¼ பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சம்பத்குமார் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

அதேபோல் மீஞ்சூர் அருகே திருவெள்ளைவாயல் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் தீபா (31). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வரும் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், 4¾ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அதேபோல் வேலூர் கிராமத்தில் வசிப்பவர் கண்ணன் (63) எல்.ஐ.சி.யில் ஏஜென்டாக பணியாற்றி வரும் இவரது வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6,500 பணத்தை மர்ம நபா்கள் திருடி சென்றனர்

இந்த இரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story