ரேஷன் கடை விற்பனையாளரை ஓராண்டு கண்காணிக்க நீதிபதி உத்தரவு

ரேஷன் கடை விற்பனையாளரை ஓராண்டு கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கடை விற்பனையாளரை ஓராண்டு கண்காணிக்க நீதிபதி உத்தரவு
Published on

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா மேக்குடி ரேஷன் கடையில் கடந்த 2008-ம் ஆண்டில் ரூ.7,522 முறைகேடு செய்ததாக அந்த கடையின் விற்பனையாளர் ரங்கராஜ் என்பவர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட ரங்கராஜை ஒருவருடம் நன்னடத்தை அலுவலரால் கண்காணிக்க வேண்டும்" என்றும், "கண்காணிப்பு காலத்தில் இதுபோன்ற ஏதேனும் குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்டால், அவருக்கு 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும்" என்றும் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com