அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Dec 2023 7:51 AM GMT (Updated: 6 Dec 2023 7:54 AM GMT)

சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்க அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமேதை அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-

"இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர். உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களை சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்!. அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்!. எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story