லுப்தான்சா ஊழியர்கள் ஸ்டிரைக் -விமான சேவை பாதிப்பு


லுப்தான்சா ஊழியர்கள் ஸ்டிரைக் -விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2024 3:39 AM GMT (Updated: 8 Feb 2024 7:43 AM GMT)

லுப்தான்ஷா விமான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல வேண்டிய பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story