பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்யலாம்; நாளை மறுநாள் கடைசி


பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்யலாம்; நாளை மறுநாள் கடைசி
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகும். நெல் சம்பா பயிருக்கு அடுத்த மாதம் நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும். மக்கச்சோள பயிருக்கான பிரிமியத் தொகை ஏக்கருக்கு ரூ.341, பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.521 மற்றும் நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.567 ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியத் தொகை செலுத்தி பயிர்காப்பீடு செய்து பயனடையாம். மேலும், விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திட முன்கூட்டியே விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று மாவட்ட கலெகடர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story