'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம், வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடுவதற்கான டிராக்டர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story






