'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் நாளை மக்களை சந்திக்கிறார்


மக்களை தேடி மேயர் திட்டம்: மேயர் பிரியா அடையாறில் நாளை மக்களை சந்திக்கிறார்
x

மக்களின் குறைகளை விரைவில் தீர்ப்பதற்காக புதிய திட்டம் .

சென்னை

சென்னை மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 3-ந்தேதி வடசென்னையில் இத்திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட எல்.பி.சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுகிறார்.

எனவே, மண்டலம் 13-க்கு உட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story