பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அண்ணாநகர் யாகப்பா நகரை சேர்ந்தவர் பாத்திமா (வயது 45), சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் மகபூப்பாளையத்தில் வியாபாரம் செய்து விட்டு எல்லீஸ்நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி பாத்திமா அணிந்திருந்த சங்கிலி மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எல்லீஸ்நகரை சேர்ந்த ஆசிக்முகமது என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





