முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பணம் திருட்டு


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 March 2023 7:00 PM GMT (Updated: 13 March 2023 7:00 PM GMT)

பெரியகுளம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 48). முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்காலிகமாக தேனியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிக்குமார் இரவு பணிக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சத்யா வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு தூங்க சென்றார். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். நேற்று காலையில் வீட்டுக்கு சென்ற சத்யா வீட்டு கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story