முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடாபாக தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இருமாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது.

சுப்ரீம்கோர்ட்டு கருத்தின் அடிப்படையில் இன்று இரு மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com