திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய கணேசன் பதவி உயர்வு பெற்று தேனி நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சேகர் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று சேகர் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com