மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்


மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்
x

மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடப்படுகிறது.

திருச்சி

திருச்சி மாநகராட்சி மண்டலம்-4 வார்டு எண் 56-க்கு உட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தகன மையம் செயல்படாது. இந்த நாட்களில் தகனம் செய்வதற்கு அருகில் உள்ள குடமுருட்டி கோணக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story