ஆசனூர் அருகே பள்ளத்தில் லாரி இறங்கியது

ஆசனூர் அருகே பள்ளத்தில் லாரி இறங்கியது.
ஆசனூர் அருகே பள்ளத்தில் லாரி இறங்கியது
Published on

தாளவாடி

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஆசனூர் அருகே மாலை சென்றபோது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்துக்கு டிரைவர் வழிவிட முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக லாரி ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இறங்கிய லாரி மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com