நம்பியூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது


நம்பியூர் அருகே   பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய  கிராம நிர்வாக அதிகாரி கைது
x

நம்பியூர் அருகே பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 26). இவர் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி முதல் லாகம்பாளையம் ஊராட்சியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

லஞ்சம்

இதற்காக அவர் கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத்தை சந்தித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் கிராம நிர்வாக அதிகாரி பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் தர ேவண்டும் என கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இதுபற்றி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கைது

லஞ்சஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி கார்த்திக் கொட்டக்காட்டு்ப்பாளையத்தில் உள்ள லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றார். பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரசாத்திடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண் பிரசாத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story