முதல் முறையாக நடந்த நீட் தேர்வு

ஆரணியில் முதல் முறையாக நடந்த நீட் தேர்வு
திருவண்ணாமலை
ஆரணி
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆரணியில் முதல்முறையாக நடந்தது.
ஆரணியில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள கண்ணம்மாள் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு 288 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சாந்தமூர்த்தி தலைமையில் தேர்வு மையம் கண்காணிக்கப்பட்டது.
தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
மாணவ- மாணவிகள் சரியாக 11.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுப்பப்பட்டனர்.
சரியாக 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தனர்.
Related Tags :
Next Story






