ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

* அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.

* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

இந்த புதிய திட்டங்கள் மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story