மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2023 7:01 PM GMT (Updated: 5 July 2023 7:39 AM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிப்பு அலுவலர் ஸ்வரண்சிங் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய பிரிவு அலுவலர் விக்ரம்கான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், உதவி கலெக்டர் வினோத்குமார், தேர்தல் தாசில்தார் ஜெயக்குமார், ஆற்காடு தாசில்தார் வசந்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story