"ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

கோப்புப்படம்  

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற்றப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது;

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாறாது. 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை நான் கூறிவிட்டேன். மருத்துவ தேவை அதிகரித்துவரும் நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


Next Story