மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மதுரை

மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

சாலை விபத்து

திண்டுக்கல் மாவட்டம் மேலராமநாதபுரம் முனியப்ப கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பாபிள்ளை. இவருடைய மகன் பாண்டி (வயது 29). இவர் கடந்த 8-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆர்.எம். காலனி பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதனைதொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், 9-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் அன்றைய தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த பாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து டாக்டர்கள், அவரின் மனைவியிடம் எடுத்துரைத்தனர். அதன்பின்னர், அவரும், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் ஆலோசனையின் பேரில் மருத்துவ குழுவினர் நேற்று காலை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைப்பு

அதன்படி, கல்லீரல் திருச்சி சித்தார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி மகாத்மா காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், இருதய வால்வு சென்னை எம்.எம்.எம். மருத்துவமனைக்கும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், அந்த உடல் உறுப்புகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் ஆம்புலன்சுகள் இடையூறு இன்றி செல்லும் வகையில் வழிவகை செய்து கொடுத்தனர்.


Related Tags :
Next Story