ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மின்தடை

இது குறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் ஆகிய பகுதிகளிலும்,

ஒட்டநத்தம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, அயிரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, டி.அய்யப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம்

இதே போன்று தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள்நீர்க்காயல், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை, செய்துங்கநல்லூர், நாகலாபுரம், வெம்பூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மஞ்சள்நீர்க்காயல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்தி பட்டி ஆகிய பகுதிகளிலும், ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை ஆகிய பகுதிகளிலும்,

செய்துங்கநல்லூர்

செய்துங்கநல்லூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய இடங்களிலும், நாகலாபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், வெம்பூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலக்கரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், எல்.வி.புரம், மேலஅருணாசலபுரம், கீழ அருணாசலபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளார்.


Next Story