நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது


நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 25 Feb 2024 12:41 PM GMT (Updated: 25 Feb 2024 1:22 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 4-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தோ்தலுக்கான தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை, கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இந்த முறை 3 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story