நாடாளுமன்ற தேர்தல்: கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல்: கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
x

நாடாளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் "2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்' வருகிற 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story