சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம்


சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 9 July 2023 8:15 PM GMT (Updated: 10 July 2023 12:10 PM GMT)

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம் நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி வட்டார அளவிலான கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தில் இருந்து, மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சகாயமாதா மருத்துவமனை இயக்குனர் அல்போன்ஸ், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ், ஜோன்ஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவ மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி திரளாக கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் புனித அன்னாள் ஆலயத்தில் தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், சகாயமாதா பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.


Next Story