மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரர் திடீர் சாவு


மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரர் திடீர் சாவு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 3:42 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் திடீரென இறந்தார்.

மதுரை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பணி முடிந்து கிளம்பும் போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை சக போலீசார் அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சரவணன் இறந்தது தெரியவந்தது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Related Tags :
Next Story