போலீஸ்காரர் திடீர் சாவு


போலீஸ்காரர் திடீர் சாவு
x

போலீஸ்காரர் திடீரென இறந்தார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரிசிக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 47). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சிந்தனைச்செல்வி என்ற மனைவியும், எழில்வேந்தன், இனியவேந்தன் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை செந்தில்நாதன் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிந்தனைச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story